Jul 26, 2022

ஊக்சுமால் (Uxmal) என்பது, தற்போதைய மெக்சிக்கோ

 

ஊக்சுமால் (Uxmal) என்பது, தற்போதைய மெக்சிக்கோவில் உள்ள ஒரு பழங்கால, செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மாயர் நகரம். மெக்சிக்கோவில் உள்ள பலெங்கே, சிச்சென், கலக்முல்; பெலிசேயில் உள்ள கராக்கோல், சுனான்துனிச்; குவாதமாலாவில் உள்ள திக்கல் ஆகியவற்றுடன், ஊக்சுமாலும் ஒரு மிக முக்கியமான தொல்லியல் களங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. பூக் பகுதியில் அமைந்துள்ள இது இப்பகுதியின் முதன்மைக் கட்டிடக்கலைப் பாணியைக் கூடிய அளவு வெளிப்படுத்தும் மாயா நகரங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் காரணமாக இது ஒரு யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wikipedia

Feb 10, 2022

தேரன் முறையில் முடிந்த மருந்துகள் அளவுகள்

 தேரன் முறையில் முடிந்த மருந்துகள்     அளவுகள்



1. எக்கு பற்பம்  = 1/4கடலை
2. வங்க பற்பம்  = 1/4கடலை
3.பலகரை பற்பம் = 1/4கடலை
4.அப்பிரக பற்பம் = 1/5 கடலை
5.காந்த பற்பம்= ¼ துவரை 
6.வெள்வங்க பற்பம் = ¼ துவரை
7.இலிங்க பற்பம் = 1/8 துவரை 
8.உப்பு பற்பம் = ¼ துவரை
9.இரச பற்பம் = 1 துவரை
10.அய பற்பம் = 1 சாமை
11.செம்பு பற்பம் = ¼ கடுகு
12.நாக பற்பம் = 1/6 அவரை
13.தங்க பற்பம் = 1/6 அவரை
14.தாளக பற்பம் = 1/8 ஓமம்
15.பவள பற்பம் = 1 மிளகு
16.முத்து பற்பம் = 1/6 அவரை
17.சங்கு பற்பம்  = ¼ அவரை
18 கந்தக பற்பம் = 1/8 துவரை

தமிழர்கள் பயன்படுத்திய மிக சிறிய அளவுகள்;

 தமிழர்கள் பயன்படுத்திய மிக சிறிய அளவுகள்;


1. முக்கால்= ¾
2. அரை = ½
3. கால் = ¼
4. நாலுமா = 1/5
5. மும்மா முக்காணி = 3/16
6. மும்மா =3/20
7. அரைக்கா = 1/8
8. இருமா =1/10
9. மா = 1/16
10. முக்காணி = 3/80
11. அரைமா = 1/40
12. காணி = 1/80
13. அரைக்காணி = 1/160
14. முந்திரி = 1/320
15.கீழ்முக்கால் = 3/1280
16.கீழ்அரை = 1/640
17.கீழ்க்கால் =  1/1280
18.கீழ் நாலுமா = 1/ 1600
19. கீழ் மூன்று வீசம் = 3/5120
20. கீழரைக்கால் = 1/5120
21. கீழ் முக்காணி = 3/25600
22. கீழ் அரைமா = 1/12800
23. கீழ் காணி = 1/51,200
24. கீழ் முந்திரி = 1/1,02400
25. இம்மி = 1/10,75,200
26.அதிசாரம் = 1/18,38,400 

மருத்துவ பழமொழிகள்

 


      மருத்துவ பழமொழிகள்

1.ஆயிரம் பேரைக்கொன்றால் அரை வைத்தியன்-ஆயிரம் வேரை கொன்றால் அரை வைத்தியன் என்பதே உண்மையான பழமொழி.சித்த மருத்துவ துறையினுள் நிபுணராவதற்கு குறைந்ததே,ஆயிரம் மூலிகை வேர்களையவது மருந்து செய்வதற்கு தெரிந்திருக்க வேண்டியதை உணர்த்தவே,மேற்கண்ட பழமொழி.

2.ஆலமரத்தினை சுற்றி அடி வயிற்றினை தொட்டு பார்-ஆன்மீக அடிப்படையாக தெரிந்தாலும்,மகப்பேறு இல்லாத மகளிர்களுக்கு சொல்லப்படும் இந்த பழமொழி.ஆலமரக் கொழுந்து,மகளிருடைய கருப்பையில் உள்ள குற்றங்களையெல்லாம் நீக்க்க் கூடியது. ஆலமரக் கொழுந்தை பாலில் அரைத்து சாப்பிட,பெண்களுக்கு கருப்பைக் குற்றம் நீங்கி,குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதே பழமொழி.

3.பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட விருந்து உண்ணலாம்-மிளகு உணவில உள்ள நச்சுத் தன்மையை போக்குவதில் சிறந்த்து. நமக்கு பிடிக்காத பகைவன் வீட்டில், நஞ்சு கலந்த உணவாக இருந்தாலும்,உணவிலுள்ள நச்சுகளை போக்கும் என்பதே பழமொழி.

4.ஆற்றையும் அடக்குமாம் அதிவிடயம்அதிவிடயம் என்ற மூலிகை கழிச்சலுக்கு சிற ந்த்தது.பொங்கி வரும் ஆற்று நீரை எவ்வாறு அணை கட்டி நிறுத்துகிறோமோ,அதுபோல மிகுதியாக வரும் கழிச்சல் நோய்களை அதிவிடயம் நிறுத்தி பயன்தரும் என்பதே பழமொழியின் பொருள்.

5.அழுத பிள்ளை சிரித்த்தாம்,கழுதை பாலை குடித்த்தாம்-கழுதை பாலை, குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு சமமாக கொடுகக்லாம்.தாய்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும்,கழுதைப்பாலில் உள்ளது.


                                                                       என்றும் அன்புடன்,

                                                                                              சித்த மருத்துவன்

                                                                                             ரெ.மாணிக்கவாசகம்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...